மார்க்ஸ் அம்பேத்கர் தொடரும் உரையாடல்

புத்தக அலமாரியில்,

அம்பேத்கர் வரிசை :

” மார்க்ஸ் – அம்பேத்கர் தொடரும் உரையாடல் “

மனித குலத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் கார்ல் மார்க்ஸ் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் பங்கை விளக்கும் மிகச்சவாலான பணியை இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
ஆனாலும், சிக்கலான இந்த முயற்சியை ‘ தொடரும் உரையாடல் ‘ என்று தன்னடக்கத்துடன் துணைத்தலைப்பில் குறிப்பிடுகின்றனர். இந்த முயற்சி முடிந்துவிடவில்லை, இதன் பின்னரும் தொடருமென்ற உண்மையையும், உறுதியையும் இந்த நூல் வெளிப்படுத்துகிறது.
மார்க்சியக் கருத்தியலுக்கும் அம்பேத்கரியக் கருத்தியலுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளையும், அவற்றின் பொருத்தப்பாடுகளையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் , இவ்விரண்டு சிந்தனைகளும் தோன்றிய வரலாற்றுச் சூழல்களை ஆய்வு செய்கிறது.
வர்க்க – சாதி உறவுகளை விவாதிக்கும் போது, பண்டையச் சூழல்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும், இன்று பேசப்படும் அடையாள அரசியலில் பொதிந்திருக்கும் வர்க்க, சாதி நலன்களையும் ஆய்வுக்குட்படுத்துகிறது.
இந்த நோக்கத்தில்தான் மார்க்சியத்திற்கும், அம்பேத்கரியத்திற்கும் இடையே ஓர் உரையாடல் அவசியமென்பதை இந்த நூல் கூர்மையாக வலியுறுத்துகிறது.

  • ராஜா, முத்துமோகன்
  • நியூ செஞ்சுரி
    ₹240
    ₹180 (One members) இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும்

புத்தக அலமாரி
( ஒவ்வொரு இல்லமும் )
9488000561

For whatsapp:

For telegram :

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started